வர்த்தகப் பிரிவு மாணவர்களுக்கு அநீதி: சபையில் சஜித் ஆவேசம்

வர்த்தகப் பிரிவுப் பட்டதாரிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை (10) நாடாளுமன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

மேல்மாகாண ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 6,000 வெற்றிடங்களில் 2,951 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சபையில் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும், வர்த்தகப் பிரிவுப் பட்டதாரிகளில் 1,200 பேர் விண்ணப்பித்திருந்த போதிலும், ஒரு வர்த்தக பட்டதாரிக்கேனும் இதுவரை நியமனம் கிடைக்கவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றில் வேண்டுகோள் விடுத்தார்.

Recommended For You

About the Author: admin