இது சிங்கள பெளத்த நாடு நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர

இது சிங்கள பெளத்த நாடு என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும், இங்கு பழைய தூபிகளைப் பராமரிக்க எவருடைய அனுமதியையும் பெற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

வேறு நாட்டில் என்றால் பெரும்பான்மையான மதமொன்றுக்கு வேறு மதத்தைச் சேர்ந்த ஒருவர் இடையூறு ஏற்படுத்தினால் அதற்கு மறுநாள் அவர் காணாமல்போயிருப்பார் என்று மறைமுக எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதமொன்றில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

Recommended For You

About the Author: webeditor