மறைந்த பிரித்தானிய எலிசபெத் மகாராணிக்கு இலங்கை நாடாளுமன்றில் மௌன அஞ்சலி

நாடாளுமன்ற அமர்வு இன்றைய தினம் முற்பகல் 9.30 மணிக்கு ஆரம்பமாகியிருந்தது.

இந்த நிலையில் பிரதமர் தினேஷ் குணவர்த்தன, மறைந்த எலிசபெத் மகாராணிக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு சபையில் கோரியிருந்தார்.

இதனையடுத்து மறைந்த எலிசபெத் கு மகாராணிக்நாடாளுமன்றில் இரண்டு நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோர் இன்றைய தினம் சபையில் பிரசன்னமாகியிருக்கவில்லை.

இன்று நாடாளுமன்றத்திற்கு 10 இற்கும் குறைவான நாடாளுமன்ற உறுப்பினர்களே வருகை தந்ததன் காரணமாக நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் செப்டெம்பர் 20ஆம் திகதி காலை 9.30 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor