பிரித்தானிய மகா ராணியின் மறைவு குறித்து ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு!

பிரித்தானிய மகா ராணி இரண்டாம் எலிசபெத் தனது 96வது வயதில் காலமானதையடுத்து, இலங்கையில் அனைத்து பொது கட்டடங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

மேலும், பிரித்தானிய மகா ராணியின் மறைவை முன்னிட்டு தேசிய துக்க காலம் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

இரண்டாம் எலிசபெத் அவர்களின் மறைவுக்கு பிரித்தானிய அரச குடும்பம் மற்றும் மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor