இரகசியமான முறையில் கொல்லப்பட்டு காட்டினுள் புதைக்கப்பட்ட சிறுமி!

இரத்தினபுரி – தெல்வல பகுதியில் காட்டில் இரகசியமான முறையில் 7 வயது சிறுமி ஒருவர் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வர்ணகலசூரிய முதலி பகுதியைச் சேர்ந்த ஹன்சிகா ஹர்ஷனி குமாரி என்ற சிறுமியே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் சிறுமியின் தாய் உட்பட இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் இருவரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

பிரதான சந்தேகநபர் தப்பியோட்டம்
பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்ற பிரதான சந்தேகநபர் என சந்தேகிக்கப்படும் நபர் கற்பழிப்பு, சிறுவர் துஷ்பிரயோகம், ஆசிட் வீசுதல், திருட்டு மற்றும் சட்டவிரோத மதுபானம் கடத்தல் ஆகிய குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் பல நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகள் நிலுவையில் உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த சிறுமியின் தாய் வேறு ஒருவருடன் வசித்து வரும் நிலையில், வீட்டிலிருந்த மாணிக்கக்கல் ஒன்று காணாமற்போனமைக்காக கறுவாத் தடியால் சிறுமி தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

எனினும், தாக்குதலுக்கு உள்ளான சிறுமியை வைத்தியசாலையில் அனுமதிக்காமல் இருந்துள்ளனர். இதில் குறித்த சிறுமி இறந்துள்ளார்.

பொலிஸார் தீவிர விசாரணை
இந்நிலையில், சிறுமியின் தாயாருடன் வசிக்கும் நபரை மதுபான விற்பனை தொடர்பில் கைது செய்ய பொலிஸார் சென்றிருந்த போது, வீட்டிலிருந்த அனைவருடனும் குறித்த நபர் காட்டிற்குள் சென்று தலைமறைவாகியுள்ளார்.

இதன்போது குறித்த சிறுமி உயிரிழந்த நிலையில், அவர் குறித்த காட்டிலேயே பதைக்கப்பட்டுள்ளார் என விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor