கட்சிக்குள் ஏற்ப்பட்ட மோதலால் நாட்டைவிட்டு வெளியேறும் பசில்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ விரைவில் அமெரிக்கா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கமைய, இராஜாங்க அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட பின்னர், பசில் ராஜபக்ஷ அமெரிக்கா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்கா செல்லும் பசில்
இராஜாங்க அமைச்சர்கள் இன்று பதவிப்பிரமாணம் செய்து கொள்வதற்கு வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. எனினும் அது தாமதமாகலாம் எனவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக கட்சிக்குள் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை காரணமாகவே இது மிகவும் தாமதமானதாக கூறப்படுகின்றது.

கட்சிக்குள் அழுத்தம்

இராஜாங்க அமைச்சர்கள் பதவிகள் தொடர்பாக பின்வரிசை உறுப்பினர்கள் கட்சித் தலைமைக்கு பலத்த அழுத்தம் பிரயோகிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Recommended For You

About the Author: webeditor