யாழில் திருமண வீடொன்றில் ஏற்ப்பட அசம்பாவிதம்

யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியில் திருமண வீட்டிற்கு சென்றிருந்த கார் ஒன்று விபத்துக்குள்ளானமை உறவினர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்து சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. திருமண மண்டபத்திற்கு மணப்பெண்ணை அழைத்துச்சென்ற காரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த கார் வீதியை விட்டு விலகி விபத்து ஏற்பட்டுள்ளது. எனினும் காரில் சென்றவர்களுக்கு எவ்வித ஆபத்தும் நேரவில்லை என கூறப்படும் நிலையில் கார் பலத்த சேதங்களுக்குள்ளாகியுள்ளது.

இதனையடுத்து இன்னுமொரு வாகனத்தை ஏற்பாடு செய்து மண்டபத்தை சென்றடையும் வரை மணப்பெண் மற்றும் உறவினர்கள் வீதியில் நின்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor