தெற்காசியாவிலேயே அதிக மின்சாரக் கட்டணம் கொண்ட நாடாக இலங்கை

தெற்காசிய அண்டைய நாடுகளை விட இலங்கை மக்கள் 2.5 முதல் 3 மடங்கு அதிக மின்சாரக் கட்டணத்தை செலுத்துகின்றமை ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

2023 ஆம் ஆண்டில் பெப்ரவரி, ஜூலை மற்றும் ஒக்டோபர் மாதங்களில் இலங்கை தனது மின்சாரக் கட்டணங்களை மூன்று முறை திருத்தியது.

மின்சாரம் வழங்குவதற்கான முழு செலவையும் திரும்ப ஈட்டுவதே கட்டண அதிகரிப்புக்குக் கூறப்பட்ட பிரதான காரணமாக அமைந்தது.

இந்த ஆய்வு, 2023 டிசம்பரில் இலங்கையில் உள்ள வீடுகளுக்கான மின்சாரக் கட்டணங்களை மற்ற தெற்காசிய நாடுகளில் உள்ள குடும்பங்கள் செலுத்தும் மின் கட்டணங்களுடன் ஒப்பிடுகிறது.

அதில், இலங்கையில் மின்சாரக் கட்டணங்கள் மீதான மக்களின் சுமையை நியாயப்படுத்தும் இரண்டு கண்டுபிடிப்புகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

1) எந்தவொரு தெற்காசிய நாட்டிலும் இல்லாத வகையில் இலங்கையில் அதிக வீட்டு மின்சாரக் கட்டணம் உள்ளது

(காட்சி 1 ஐப் பார்க்கவும்)

2) ஏனைய தெற்காசிய நாடுகளை விட இலங்கை மக்கள் மின்சாரக் கட்டணம் 2.5 முதல் 3 மடங்கு அதிகம். (காட்சி 2 ஐப் பார்க்கவும்).

மின் கட்டணக் குறைப்பு

2024 பெப்ரவரியில் மின் கட்டணக் குறைப்பு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டமைப்பானது மின்சாரக் கட்டணத்தில் சுமார் 4% அல்லது அதற்கும் குறைவான செலவைக் குறைக்கும்.

மின்சாரத்தின் மீதான எந்தவொரு அரசாங்க வரியையும் தவிர்த்து மாதத்திற்கு 100 முதல் 300 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்களை ஒப்பிடுவதன் அடிப்படையில் பகுப்பாய்வு செய்யப்படுகிறது.

காட்சி 2, இலங்கையில் 100 யூனிட்களை பயன்படுத்துவதற்கு 5,280 ரூபாய் செலவாகும், அதே சமயம் தெற்காசியாவிற்கான அந்த கட்டணம் 2,078 ரூபாவாகும்.

இலங்கையில் 300 அலகுகளைப் பயன்படுத்துவதற்கு 21,860 ரூபாய் செலவாகும், அதே சமயம் தெற்காசியாவிற்கான அந்த கட்டணம் 7,340 ரூபாவாகும்.

ui

இலங்கையில் மின்சாரக் கட்டணம்: தெற்காசியாவிலேயே அதிக கட்டணம்

ouyo

சராசரி தெற்காசிய விலைகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் மின்சார கட்டணம்

Recommended For You

About the Author: admin