பாகிஸ்தானில் இணைய சேவைகள் முடக்கம்!

தேர்தல் நாளில் இணையதளம் மற்றும் மொபைல் போன் சேவையை நிறுத்த பாகிஸ்தான் தீர்மானித்துள்ளது.

அது பாகிஸ்தானில் ஏற்படக்கூடிய இடையூறுகள் மற்றும் பயங்கரவாதச் செயல்களைக் கட்டுப்படுத்துவதாகும்.

வாக்கெடுப்பின் மூலம் ஏற்படக்கூடிய எதிர்பாராத குழப்பங்களுக்கு ஆயத்தமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எனினும் இதன் மூலம் சுமார் 241 மில்லியன் மக்களைக் கொண்ட பாகிஸ்தானியர்களின் உரிமைகள் மீறப்படும் என பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Recommended For You

About the Author: admin