மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவு பகுதியில் சட்டவிரோத உள்ளூர் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஓமனியாமடு பிரதேச காட்டுப்பகுதியில் சட்டவிரோத உள்ளூர் தயாரிப்பு துப்பாகி வெடித்ததில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

சட்டவிரோதமாக ஓமனியாமடு பிரதேச காட்டுப்பகுதியில் நேற்று (03) இரவு மிருகவேட்டையில் ஈடுபட்ட போதே இவ் அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

வைத்தியசாலையில் அனுமதி

இந்நிலையில் படுகாயமடைந்த நபர் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவத்தில் வாகரைப் பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய நபரே படுகாயமடைந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: webeditor