மலேசியாவின் 17 ஆவது மன்னராக பதவியேற்றார் சுல்தான் இப்ராஹிம்

மலேசியாவின் தெற்கு மாநிலமான ஜோகரைச் சேர்ந்த சுல்தான் இப்ராஹிம் புதன்கிழமை (31) நாட்டின் புதிய மன்னராக பதவியேற்றார்.

மன்னர் நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் அதிக செல்வாக்கு மிக்கவராக மாறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

65 வயதான சுல்தான் இப்ராகிம் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் மலேசியாவின் 17 ஆவது மன்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மலேசியாவின் மன்னர், பாரம்பரியமாக பெரும்பாலும் சடங்கு பாத்திரத்தை வகித்து வருகிறார். இருப்பினும், கடந்த ஐந்து ஆண்டுகளாக அரசியல் ஸ்திரமின்மைக்கு மத்தியில், போட்டியிடும் அரசியல் பிரிவுகளை சமநிலைப்படுத்துவதில் மன்னர்கள் இன்றியமையாத பங்கு வகித்துள்ளனர்.

முந்தைய மன்னரான சுல்தான் அப்துல்லா, கொவிட்-19 தொற்றுநோய்களின் போது முக்கியமானவராக இருந்தார்.

மேலும் 2022 பொதுத் தேர்தலுக்குப் பின்னர் நாடு எதிர்கொண்ட ஒரு அரசியல் முட்டுக்கட்டையைத் தவிர்க்க உதவினார்.

இதன் விளைவாக தொங்கு பாராளுமன்றம் ஏற்பட்டது.

மலேசியா இறுதியில் பிரதமர் அன்வார் இப்ராகிம் தலைமையில் ஆட்சி அமைத்தது.

Recommended For You

About the Author: admin