சட்டவிரோதமான முறையில் மஞ்சளினை கடத்திச்சென்ற இருவரை கைது!

வவுனியாவில் சட்டவிரோதமான முறையில் மஞ்சளினை கடத்திச்சென்ற இருவரை கைது செய்துள்ளதாக இரட்டைபெரியகுளம் பொலிஸர் தெரிவித்தனர்.

இந்நிலையில், இராணுவ புலனாய்வாளர்களிற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி கடத்தப்படவிருந்த பெருமளவான மஞ்சளினை இரட்டைபெரியகுளம் பகுதியில் வைத்து பொலிஸாரால் பிடிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தையும் பெருமளவிலான மஞ்சளினையும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 26 மற்றும் 27 வயதுடைய இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும் இக்கடத்தல் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை இரட்டைபெரியகுளம் பொலிஸரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Recommended For You

About the Author: webeditor