பிக்கு சுட்டுக் கொலை; சந்தேக நபர்கள் பயன்படுத்திய வாகன விபரம் வெளியானது

கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டிய பகுதியில் பிக்கு ஒருவர் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த தேரர் மல்வத்துஹிரிபிட்டிய பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஞானராம விகாரையில் கடந்த மூன்று மாதங்களாக வசித்து வந்துள்ளார்.

ஜோதிட வேலை செய்ய வந்த நால்வர் கொண்ட ஒரு கும்பலால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

சந்தேக நபர்கள் CAO-5345 என்ற எண் கொண்ட ஊதா நிற காரில் வந்துள்ளனர்.

குறித்த கார் மாலபே, சுதர்சன் மாவத்தையில் அமைந்துள்ள நிறுவனமொன்றுக்கு சொந்தமானது எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

உயிரிழந்த பிக்குவின் சடலம் கம்பஹா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin