இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி என்ற ரீதியில் கோட்டாபய ராஜபக்சவைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமை என்று பிரதமர் தினேஷ் குணவர்த்தன ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு வசதிகளை வழங்கியுள்ள அரசாங்கம்
மீண்டும் நாடு திரும்பியுள்ள கோட்டாபய ராஜபக்சவுக்கு உரிய பாதுகாப்பு வசதிகளை அரசாங்கம் வழங்கியுள்ளதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.
அவர் மீண்டும் அரசியலுக்குள் வருவதா என்பது தொடர்பில் அவரே முடிவு எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் தினேஷ் குணவர்த்தன மேலும் குறிப்பிட்டுள்ளார்.