நாடு திரும்பிய கோட்டாவிற்கு கடும் பாதுகாப்பு!

நள்ளிரவு நாட்டுக்கு வந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்காக, புதிய பாதுகாப்பு பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் இராணுவ வீரர்கள் அடங்கிய வகையில், இந்த பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடும் பொருளாதார நெருக்கடி

அதேவேளை நாட்டில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட மக்கள் போராட்டத்தை அடுத்து நாட்டை விட்டு வெளியேறிய கோட்டாபய தனது பதவியையும் இராஜினாமா செய்திருந்தார்.

அதன்பின்னர் நாட்டில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டதை அடுத்து மக்கள் போராட்டங்கள் ஒடுக்கப்பட்டிருந்தது.

அத்துடன் நாடும் பொருளாதார நெருக்கடியில் இருந்து சற்று மீண்டுள்ள நிலையில், நாட்டைவிட்டு வெளியேறி 3 மாதங்களின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி நாட்டுக்கு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor