நிதி அமைச்சின் செயலாளராக கலாநிதி சுரேன் படகொட அனேகமாக நியமிக்கப்படும் சாத்தியம்

எரிசக்தி அமைச்சின் முன்னாள் செயலாளரான கலாநிதி சுரேன் படகொட அனேகமாக நிதி அமைச்சின் செயலாளராக நியமிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இல்லாவிட்டால் அவர் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுரேன் படகொட முன்னர் நிதியமைச்சில் மேலதிக செயலாளராக கடமையாற்றியதோடு அனுபவமிக்க அதிகாரியும் ஆவார்.

வழக்கறிஞராகவும் இருக்கும் அவர் அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்.

Recommended For You

About the Author: webeditor