கேன் தண்ணீரில் இருக்கும் ஆபத்தை அறிவீர்களா?

சுத்தமான குடிநீர் இல்லாத காரணத்தால் இன்று பலர் கேன் வாட்டர்கள் வாங்குவதைதான் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

கேன் வாட்டர் குடிப்பதற்கு நன்றாக இருந்தாலும் அதனால் உண்டாகும் பாதிப்பு பல மடங்கு என உலக சுகாதார அமைப்பு மற்றும் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
அதாவது, ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ் (RO) என்று சொல்லக் கூடிய ஆர்ஓ நீரை மாதக்கணக்கில் உட்கொண்டால் கடுமையான பக்க விளைவுகளை உருவாக்கும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கிறது.

குழாய் நீரில் காணப்படும் அசுத்தங்களை விட ஆர்ஓ நீரைக் குடிப்பது அதிகமான உடல் தீங்கை உண்டாக்கும் என அறிவியல் பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வீடுகளிலும் தண்ணீரை சுத்திகரிக்க ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ் (ஆர்ஓ) அமைப்புகள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.

ஆர்ஓ சிஸ்டம் தண்ணீர் அசுத்தங்களை நீக்குகிறது என்பது உண்மைதான் என்றாலும் அதோடு சேர்ந்து நன்மை பயக்கும் கால்சியம் மற்றும் மெக்னீசியத்தையும் 92-99% நீக்குகின்றன என்பது தெரியுமா..?

RO நீர் தொடர்பான நூற்றுக்கணக்கான அறிவியல் ஆய்வுகளைப் பகுப்பாய்வு செய்த பிறகு, உலக சுகாதார நிறுவனம் அத்தகைய நீர் விலங்கு மற்றும் மனித உயிரினத்தின் மீது பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று வெளியிட்டுள்ளது.

இவ்வளவு ஆபத்தா?
அப்படி RO நீரை உட்கொள்வதால் இருதயக் கோளாறுகள், சோர்வு, உடல் பலவீனம் , தசைப்பிடிப்பு, கால்சியம் குறைபாடு ஆகிய பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும்.

இதை ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர்.

போதுமான கனிமங்கள் இல்லாத RO நீர், உட்கொள்ளும் போது, உடலில் இருந்து தாதுக்களை வெளியேற்றுகிறது. இதன் பொருள் உணவு மற்றும் வைட்டமின்களில் உட்கொள்ளும் தாதுக்கள் சிறுநீர் வழியாக வெளியேற்றப்படுகின்றன.

குறைவான கனிமங்கள் மற்றும் அதிக தாதுக்கள் வெளியேற்றப்படுவது கடுமையான எதிர்மறை பக்க விளைவுகளையும் பெரிய அளவிலான உடல்நலப் பிரச்சினைகளையும் ஏற்படுத்துகிறது.

உணவின் மூலம் உட்கொள்ளும் கனிமங்கள் RO நீரில் உள்ள தாதுப் பற்றாக்குறையை ஈடுசெய்ய முடியுமா என்று கண்டறிய ஒரு அறிவியல் ஆய்வு நடத்தப்பட்டது.

அதில் , விஞ்ஞானிகள் நீரிலிருந்து குறைக்கப்பட்ட கனிம உட்கொள்ளலை அவர்களின் உணவுகளால் ஈடுசெய்ய முடியாது என்று முடிவு செய்தனர்.

RO நீர் குடிப்பது உடல் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் நீரில் கரைந்துள்ள எலக்ட்ரோலைட்டுகளை அழிக்கிறது.இதனால் உறுப்புகளுக்கு ஆற்றல் கிடைக்காமல் போகிறது. இதனால் அதன் இயக்கங்களும் தடைபடுகிறது.

இந்த நிலை ஆரம்பத்தில் பக்க விளைவுகளாக சோர்வு, பலவீனம் மற்றும் தலைவலி போன்றவற்றை உண்டாக்குகின்றன. மிகவும் கடுமையான அறிகுறிகளாக தசைப்பிடிப்பு மற்றும் பலவீனமான இதய துடிப்பு ஆகிய அறிகுறிகளை அனுபவிக்கலாம். எனவேதான் RO குடிநீர் சுகாதாரக் கேடு என எச்சரிக்கின்றனர்.
அதுமட்டுமன்றி உயர் இரத்த அழுத்தம், கரோனரி இதய நோய், இரைப்பை புண்கள், நாள்பட்ட இரைப்பை அழற்சி, கர்ப்ப சிக்கல்கள் மற்றும் மஞ்சள் காமாலை, இரத்த சோகை, எலும்பு முறிவுகள் மற்றும் வளர்ச்சி கோளாறுகள் உள்ளிட்ட பல சிக்கல்களுக்கு RO நீர் ஆபத்து காரணியாக இருக்கலாம் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சிலர் குடிப்பது மட்டுமன்றி சமையலுக்கும் பயன்படுத்துவார்கள்.

அப்படி சமையலுக்குப் பயன்படுத்தும் போது, உணவு ,காய்கறிகள், இறைச்சி, தானியங்கள் ஆகியவற்றிலிருந்து அனைத்து அத்தியாவசிய கூறுகளை இழக்க நேரிடும். இத்தகைய இழப்புகள் மெக்னீசியம் மற்றும் கால்சியத்தை 60 % வரை அழித்துவிடும்.

சில நுண் தாதுக்களான தாமிரம் 66 %, மாங்கனீசு 70 %, கோபால்ட் 86 % என அழிந்துபோகும். எனவே சமையலுக்கு RO நீரை பயன்படுத்துவது மிகவும் தவறான முடிவு என்கின்றனர்.

மாற்று வழி உண்டு
இதற்கு மாற்று வழியாக தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து குடிக்கலாம்.

இதனால் அதன் கெட்ட பண்புகள் அழிந்துவிடும் என்பது அர்த்தமில்லை.

அதில் இருக்கும் இரசாயனங்கள் கணிசமான அளவு குறையலாம் என நம்பப்படுகிறது. இது முழுமையான மாற்றுவழி இல்லை என்றாலும் இதை செய்தால் கொஞ்சமேனும் பாதிப்புகளை தவிர்க்கலாம்.

Recommended For You

About the Author: webeditor