யாழில் வன்முறைக் கும்பலின் அட்டகாசம்

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பகுதியில் வீடு மற்றும் மோட்டார் சைக்கிள் மீது வன்முறை குழுவொன்று தாக்குதல் நடத்தியுள்ளது.

நள்ளிரவு 12.00 மணியளவில் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மானிப்பாய், சங்குவேலி தெற்கு பகுதியில் வீடு ஒன்றின் மீது வன்முறைக்குழு தாக்குதல் நடாத்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத சிலர் வீட்டின் ஜன்னல்களை சேதப்படுத்திவிட்டு, வீட்டின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்து எரித்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin