இந்தோனேஷிய ரயில் விபத்து: மீட்பு நடவடிக்கைகள் துரிதம்

இந்தோனேசஷியாவின் ஜாவாவின் கிழக்கே ரான்சேகெக் மாவட்டத்தில் இரண்டு பயணிகள் ரயில்கள் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விபத்தில் பணியாளர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், காயமடைந்த பயணிகளின் எண்ணிக்கை 28 எனவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் ரயில் பெட்டிகள் உடைந்து அருகில் உள்ள வயல்வெளியில் விழுந்துள்ளதாகவும், அந்த பெட்டிகளில் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து ஏற்பட்ட போது ரயிலில் 478 பயணிகள் இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

விபத்துக்கான காரணம் தெரியவில்லை என்றும், இதுகுறித்து அரசு போக்குவரத்து பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

Recommended For You

About the Author: admin