அமைப்பாளர் பதவியில் இருந்து தயாசிறி நீக்கம்

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள தயாசிறி ஜயசேகர, அந்த கட்சியின் குருநாகல் மாவட்ட தலைவர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு பதிலாக வடமேல் மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் லக்ஷ்மன் வெண்டருவவை மாவட்ட தலைவராக நியமிக்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் குருநாகல் மாவட்ட அமைப்பாளர்கள், கட்சியின் தலைவரான மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிங்கிரியவில் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற குருநாகல் மாவட்ட அமைப்பாளர்கள் கூட்டத்தில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜனவரி 8 ஆம் திகதி நடைபெறும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நிறைவேற்றுச் சபை கூட்டத்தில இது குறித்தும் மேலும் சில பிரச்சினைகள் தொடர்பாகவும் முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தெரியவருகிறது.

Recommended For You

About the Author: admin