யாழ் பல்கலை மாணவி திடீர் மரணம்!

டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த பல்கலைக்கழக மாணவியொருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் 25 வயது மதிக்கத்தக்க குணரத்தினம் சுபீனா என்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவியே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் இறுதியாண்டில் கல்வி கற்று வந்த குறித்த மாணவி காய்ச்சல் காரணமாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டார்.

இருப்பினும் குறித்த மாணவி சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் (23-12-2023) உயிரிழந்துள்ளார்.

தற்போது சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

வடமாகாணத்தில் அதுவும் யாழில் கடந்த சில மாதங்களாக டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வருகின்றன. இதுதொடர்பில் வட மாகாண அளுநர் விசேட நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இருந்த போதிலும் பலர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டும், உயிழந்தும் வருகின்றனர்.

Recommended For You

About the Author: webeditor