உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கலாம்!

எதிர்வரும் நாட்களில் ப்ரைட் ரைஸ், கொத்து ரொட்டி உள்ளிட்ட உணவுப் பண்டங்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தற்போதைய பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளை கருத்திற்கொண்டு அடுத்த சில தினங்களில் உணவுப் பொருட்களின் விலையை 50 ரூபாவினால் அதிகரிக்க நேரிடும் என குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை சந்தையில் அரிசி, மரக்கறிகள், இறைச்சி, மீன், முட்டை போன்றவற்றின் விலை உயர்வினால் எதிர்வரும் நாட்களில் அரிசி, பிரைட் ரைஸ், கொத்து போன்றவற்றின் விலைகளை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor