யாழில் போதைப் பொருளுடன் கைதான பெண்!

யாழ்ப்பாணம் வடமராட்சி துன்னாலை கிழக்கு பகுதியில் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டார்.

51 வயதான குறித்த பெண் தனது ஆடைக்குள் ஹெரோயினை மறைத்து வைத்திருந்த நிலையில் நெல்லியடிப் பொலிஸாரால் இன்று கைதுசெய்யப்பட்டார்.

இதன்போது ஆறு கிராம் அளவுள்ள ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபரை நாளை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor