பௌத்த மதத்தை அவமதித்த பிக்கு கைது!

கண்டியில் விஷ்வ புத்தா என்ற பிக்கு ஒருவர் பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்ட குற்றச்சாட்டின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலகெடிஹேன பிரதேசத்தில் வைத்து குறித்த பிக்கு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

கைதான பிக்கு இன்றைய தினம் (13-12-2023) கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: webeditor