2024ம் ஆண்டு இலங்கை தீவு மாயமாகிவிடும்

2024ம் ஆண்டு இறுதிக்குள் சுனாமி வரும் என்றும் இலங்கை எனும் தீவே காணாமல் போகும் என்றும் நடிகர் அனுமோகன் பரபரப்பு பேட்டியளித்துள்ளார்

யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் 31.12. 2024க்குள் ஒரு பெரிய அழிவு வரும்.

இலங்கை எனும் தீவு சுனாமியால் காணாமல் போய்விடும் என்று சித்தர் ஏட்டுக் குறிப்புகளில் இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கெனவே இலங்கை, சுனாமி வந்ததால்தான் தமிழ்நாட்டை விட்டு பிரிந்து தனித்து தீவாக காணப்படுகிறது.

2004ம் ஆண்டு சுனாமி வரும் என சொன்னோம். அதை யாரும் நம்பவில்லை. எனவே இந்த முறை சுனாமியால் இலங்கை அழியும்.

மேலும், சுனாமி காரணமாக, சென்னை தேனாம்பேட்டை வரை கடலாக மாறிவிடும் எனக் கூறி நடிகர் அனுமோகன் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார்.

Recommended For You

About the Author: webeditor