கொழும்பு வாழ் மக்களுக்கான முக்கிய அறிவிப்பு!

கொழும்பின் சில பகுதிகளில் அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக நாளை 16 மணித்தியால நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

இந்த தகவலை நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பில் உள்ள 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பிரதேசங்களுக்கு நாளை (09) மாலை 5 மணி முதல் நாளை மறுதினம் (10) காலை 9 மணி வரை இவ்வாறு நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக சபை அறிவித்துள்ளது.

Recommended For You

About the Author: webeditor