கிளிநொச்சியில் பரபரப்பு!

கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள புகையிரத பாதைக்கு அருகில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு (26) சடலம் ஒன்று மீட்கப்பட்ட சம்பம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பி?ணையில் விடுவிக்கப்பட்ட நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில் கடந்த 31.12.2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொலை சம்பவத்துடன் தொடர்புபட்டவர் என சந்தேகத்தில் கைது செய்யப்படட்டார்.

பிணையில் விடுதலை
இந்நிலையில், கடந்த மாதம் பிணையில் விடுதலை செய்யப்பட்டவர் நேற்று (26) இரவு 10 மணியளவில் சடலமாக காணப்பட்ட நிலையில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் கிளிநொச்சி செல்வாநகர் கிராமத்தைச் சேர்ந்த 22 வயதுடைய ஜோன் பிரகாஸ் என்பவராவர்.

சடலத்தை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் அவர்கள் பார்வையிட்ட பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள , நிலையில் கொலையா அல்லது தற்கொலை என விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸா மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: webeditor