யாழில் திடீரென தீப்பற்றி எரிந்த வானால் நிகழ்ந்த அசம்பாவிதம்!

யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியொன்றில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வான் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்து சேதமடைந்துள்ளது.

இச்சம்பவம் இன்றைய தினம் (23-11-2023) காலையில் கரவெட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

வானில் ஏற்பட்ட தீயை அணைக்க உரிமையாளர் முயன்ற வேளை தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று காலை பாடசாலை சேவையை முடித்துவிட்டு வான் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது திடீரென தீ பற்றியதாக தெரிவிக்கப்பட்டது.

இச் சம்பவம் தொடர்பில் நெல்லியடிப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Recommended For You

About the Author: webeditor