கந்தஷட்டி விரத காலத்தில் முருக நாம பஜனையும் புராண படன நிகழ்வும்

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் மணிமண்டபத்தில் முருக நாம பஜனையும் புராண படன நிகழ்வும் கந்தசஷ்டி விரத காலத்தில் 14.11.2023 செவ்வாய்க்கிழமை தொடக்கம் 18.11.2023 சனிக்கிழமை  முன்னெடுக்கப்பட்டது.

அந்தவகையில் 18.11.2023 சனிக்கிழமை காலை மட்டுவில் ஓம் நமசிவாய பஜனைக் குழுவினரின் பஜனை நிகழ்வும், மாலை கந்தரோடை ஓம் நாகபூசணி அம்மன் பஜனைக்குழுவினரும், பிரம்மஸ்ரீ கோபாலசர்மா குழுவினர் பஜனை நிகழ்வினைத் தொடர்ந்து, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் ஆனைப்பந்தி, குருகுலத்தில் நடாத்தப்பட்டு வரும் புராணபடன வகுப்பு மாணவர்களின் புராண படன நிகழ்வும் இடம்பெற்றன.

Recommended For You

About the Author: S.R.KARAN