யாழில் நட்சத்திர விடுதியொன்றின் மோசமான செயல்! அம்பலம்

யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் உள்ள நட்சத்திர விடுதியொன்றின் கழிவு நீரை அகற்றும் பவுசர் வண்டி மக்கள் நடமாடும் இடத்தில் கழிவு நீரை கொட்டிவருவதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த விடுதியில் கழிவு நீரை யாழ் செம்மணி நாயன்மார்கட்டு பகுதியில் ஊற்றி விட்டு செல்ல முயன்ற பவுசர் வண்டியொன்று அப்பகுதி மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டது.

கையும் களவுமாக பிடித்த பிரதேச மக்கள்
பவுசர் வண்டி , நேற்று வெள்ளிக்கிழமை (17) மடக்கி பிடிக்கப்பட்டு சுகாதார பரிசோதகர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

வழமையாக இவ்வாறு கழிவுகளை ஊற்றி விட்டு செல்லும் பவுசர் வண்டியை அவதானித்த பிரதேச மக்கள் நேற்றுக் காலை மறைந்திருந்து பவுசரில் வந்தவர்கள் கழிவு நீரை ஊற்றும் போது கையும் களவுமாக பிடித்துள்ளனர்.

 

Recommended For You

About the Author: webeditor