சிறுப்பிட்டியில் குருபூசையும் சொற்பொழிவும்

சிறுப்பிட்டியில் குருபூசையும் சொற்பொழிவும் இடம்பெற்றது.
**********************************
சைவ வாழ்வியலில் பெரிய புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் முகமகாச் சிவநெறிப் பிரகாசர் சமயஜோதி கதிகாமன் நிஜலிங்கம் அவர்களின் ஒழுங்கமைப்பில் வாராந்த பெரியபுராணச் சிறப்புச் சொற்பொழிவுத் தொடர் 32
(கணம்புல்ல நாயனார் )
சிறுப்பிட்டி அருள்மிகு ஸ்ரீ நாகதம்பிரான் ஆலயப் பிரதான மண்டபத்தில் 17.11.2023 வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணிக்கு நடைபெற்றது.

சேக்கிழார் பெருமானின் குருபூஜையை தொடர்ந்து சொற்பொழிவினை சைவப்புலவர் செ. த. குமரன் அவர்கள் ” தலைமுடியை அறுத்து திருப்புலீச்சரப் பெருமானுக்கு விளக்கெரித்த நாயனார் ” என்னும் விடயப்பொருளில் சொற்பொழிவு ஆற்றினார்.

சொற்பொழிவில் இருந்து மாணவர்களிடம் வினாக்கள் தொடுக்கப்பட்டுப் பாராட்டுப் பரிசில்கள் வழங்கப்பட்டன.

Recommended For You

About the Author: S.R.KARAN