” தலைமுடியை அறுத்து திருப்புலிச்சரப் பெருமானுக்கு விளக்கெரித்த நாயனார் ” சொற்பொழிவு

சிறுப்பிட்டியில் குருபூசையும் சொற்பொழிவும் இடம்பெறவுள்ளது.

சைவ வாழ்வியலில் பெரிய புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக சிவநெறிப் பிரகாசர் சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கம் அவர்களின் ஒழுங்கமைப்பில் நடத்தும் வாராந்த பெரிய புராணச் சிறப்புச் சொற்பொழிவுத் தொடர் 32 ( கணம்புல்ல நாயனார் ) சிறுப்பிட்டி அருள்மிகு ஸ்ரீ நாகதம்பிரான் ஆலயப்
பிரதான மண்டபத்தில் எதிர்வரும் 17.11.2023 வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

சேக்கிழார் பெருமானின் குருபூஜையை தொடர்ந்து சொற்பொழிவினை சைவப்புலவர் சி. கா. கமலநாதன் அவர்கள் ” தலைமுடியைச் அறுத்து திருப்புலிச்சரப் பெருமானுக்கு விளக்கெரித்த நாயனார் ” என்னும் விடயப்பொருளில் சொற்பொழிவும், சொற்பொழிவில் இருந்து மாணவர்களிடம் வினாக்கள் தொடுக்கப்பட்டுப் பாராட்டுப் பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.

Recommended For You

About the Author: S.R.KARAN