கந்தசஷ்டி விரத காலத்தில் முருக நாம பஜனையும் புராண படன நிகழ்வும்

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் மணி மண்டபத்தில் முருக நாம பஜனையும் புராண படன நிகழ்வும் கந்தசஷ்டி விரத காலத்தில் 14.11.2023 செவ்வாய்க்கிழமை தொடக்கம் 18.11.2023 சனிக்கிழமை வரை மாலை 3.00 மணிக்கு முன்னெடுக்கப்படவுள்ளது.

அந்தவகையில் 15.11.2023 புதன்கிழமை தம்பாட்டி நுனிபுரம் முத்துமாரி அம்மன் ஆலய குழுவினரின் பஜனை நிகழ்வினைத் தொடர்ந்து இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் ஆனைப்பந்தி குருகுலத்தில் நடாத்தப்பட்டு வரும் புராண படன வகுப்பு மாணவர்களின் புராண படன நிகழ்வும் நடைபெற்றது.

Recommended For You

About the Author: S.R.KARAN