பேருந்துகளில் சி.சி.டி.வி. கமெரா பொருத்த தீர்மானம்!

பயணிகள் பேருந்துகளில் சி.சி.டி.வி. கமெராக்கள் பொருத்துவதை கட்டாயமாக்க நடாளுமன்றக்குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிகப்படுகின்றது.

அண்மையில் நாடாளுமன்றத்தில் கூடிய எரிசக்தி மற்றும் போக்குவரத்து துறைசார் மேற்பார்வைக் குழுவே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

அதிகாரிகளுக்கு பணிப்புரை
பயணிகள் பேரூந்துகளுக்கான வீதி அனுமதிப்பத்திரம் வழங்கும் போது ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தை கட்டாயமாக்குமாறும் எரிசக்தி மற்றும் போக்குவரத்து துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் நாலக பண்டார கொட்டேகொட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன்போது பயணிகள் பேருந்துகளில் சி.சி.டி.வி. கமெராக்கள் பொருத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துமாறும் அதன்படி பேருந்துகளில் சி.சி.டி.வி. கமெராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்குமாறும் கூட்டத்தில் கலந்துகொண்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு குழுவின் தலைவர் உத்தரவிட்டார்.

Recommended For You

About the Author: webeditor