தெல்லிப்பளையில் குருபூசையும் சொற்பொழிவும்

தெல்லிப்பளையில் குருபூசையும் சொற்பொழிவும் இடம்பெற்றது.

சைவ வாழ்வியலில் பெரிய புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் முகமகாச் சிவநெறிப் பிரகாசர் சமயஜோதி கதிகாமன் நிஜலிங்கம் அவர்களின் ஒழுங்கமைப்பில் நடாந்தும் வாராந்த பெரியபுராணச் சிறப்புச் சொற்பொழிவுத் தொடர் 31
( ஐடிகள் காடவர்கோன் நாயனர் ) தெல்லிப்பளை அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத சந்திரமௌலீஸ்வரர் ஆலயப் பிரதான மண்டபத்தில் 10.11.2023 வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணிக்கு இடம்பெற்றது.

சேக்கிழார் பெருமானின் குருபூஜையை தொடர்ந்து சொற்பொழிவினை இளஞ்சைவப்புலவர் க. கைலநாதன் அவர்கள் ” ஊர் ஊராகச் சென்று இறைவனை வெண் பாவால் புகழ்த்து பாடிய நாயனார் ” என்னும் விடயப்பொருளில் சொற்பொழிவு ஆற்றினார்.

சொற்பொழிவில் இருந்து மாணவர்களிடம் வினாக்கள் தொடுக்கப்பட்டுப் பாராட்டுப் பரிசில்கள் வழங்கப்பட்டன.

Recommended For You

About the Author: S.R.KARAN