அரச ஊழியர்களுக்கு ஜனாதிபதி வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான செய்தி!

2024 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்கள் அனைவருக்கும் சம்பள உயர்வு வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் (30) மாலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

அதேசமயம் , தனியார் துறை ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இதேவேளை, 2024ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் 20 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பைக் கோரி நாடு முழுவதும் அரசாங்க ஊழியர்கள் நேற்று கவனவீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor