வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் 48 இலங்கையர்கள்

வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் 48 குற்றவாளிகளில் 30 பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புலனாய்வு அமைப்புகள் மேற்கொண்ட தீவிர விசாரணைகளில் இந்த விடயம் கண்டுபிடித்துள்ளன.

இவர்களில் பிரதானமாக ஐந்து பேர் இலங்கைக்கு போதைப்பொருள் கொண்டு வருவதில் நேரடியாக ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

போதைப்பொருள்
எவ்வாறாயினும், இந்தக் குழு தொடர்பில் சாக் நாடுகளின் இணக்கப்பாட்டின் அடிப்படையில் இவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

டுபாய் நாட்டில் பல சிறப்பு உளவாளிகளும் இதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor