விசாவுக்காக கொழும்பு சென்ற நபர் மாயம்!

யாழ்ப்பாணத்திலிருந்து விசா அலுவல்கள் நிமித்தம் அமெரிக்க தூதரகத்திற்குச் சென்று அலுவல்களை நிறைவு செய்து விட்டு திரும்பிய முதியவரை திங்கட்கிழமை (23) ஆம் திகதி முதல் காணவில்லை என உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

முதியவர் திங்கட்கிழமை கொழும்பில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்திற்கு சென்று அங்கு விசா அலுவல்களை நிறைவு செய்து விட்டு ஆட்டுப்பட்டித் தெருவில் உள்ள விடுதி ஒன்றிற்கு உறவினர்களுடன் திரும்பியுள்ளார்.

பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
அதன் பின்னர், முதியவர் அன்று பிற்பகல் 3 மணியளவில் கடைக்குச் செல்வதாக தெரிவித்து விடுதியிலிருந்து புறப்பட்டவர் இன்று வரை திரும்பவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor