எதிர்காலத்தில் எரிபொருள் நிரப்பும் நிலையங்களை இயக்குவதில் சிக்கல் ஏற்ப்படலாம்

எதிர்காலத்தில் எரிபொருள் நிரப்பும் நிலையங்களை இயக்குவதில் சிக்கல் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் 18% ஆக மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையிலேயே இச் சிக்கல் ஏற்பபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை பெற்றோலிய விநியோகஸ்த்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போதைய பொருளாதார நிலைமையுடன் எரிபொருள் விற்பனை ஏற்கனவே பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சங்கத்தின் இணைச் செயலாளர்
இதனை சங்கத்தின் இணைச் செயலாளர் கபில நாவுதுன்ன தெரிவித்துள்ளார்.

இந்தப் பிரச்சினை நாட்டில் உள்ள அனைத்து தொழிற்சாலைகள் மற்றும் எரிபொருள் நிரப்பும் நிலையங்களையும் பாதிக்கும்.

செலவுகள் அதிகரித்து நாளாந்த விற்பனை குறைந்து வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார் .

இதேவேளை எரிபொருள் விலையை நாளாந்தம் திருத்தியமைக்கும் அரசாங்கத்தின் தீர்மானம் திருப்திகரமாக உள்ளதாகவும் இது மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor