வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு!

நில்வலா கங்கை பகுதிக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று செவ்வாய்க்கிழமை (24) காலை முதல் நாளை புதன்கிழமை (25) காலை வரையான 24 மணித்தியாலங்களில் வெள்ள நிலைமை தொடர்பில் அவதானம் செலுத்துமாறு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த பிரதேசங்களில் உள்ள வீதிகளை பயன்படுத்துவோர் வெள்ள நிலைமை தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor