போதைப் பொருளுடன் கைதான மீனவர்கள்

இலங்கை நோக்கிப் பயணித்த பல நாள் படகு ஒன்றுடன் இலங்கை மீனவர்கள் 5 பேர் 200 கிலோ கிராம் போதைப்பொருள் சரக்குகளுடன் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

அரச புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக கடற்படையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தக் கப்பலும், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஐந்து மீனவர்களும் கொழும்பு – திக்கோவிட்ட துறைமுகத்துக்குக் அழைத்து வரப்படுவதாக கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Recommended For You

About the Author: webeditor