பெற்றோருடன் ஏரியில் குளித்த சிறுவனுக்கு நிகழந்த சோகம்!

அனுராதபுரத்தில் பெற்றோருடன் ஏரியில் குளித்த ஆறு வயது சிறுவன் ஏரியின் மதகில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாத்திரைக்காக பெற்றோருடன் சென்ற ஆறு வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த சிறுவன்
சிறுவன் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக அநுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

கேகாலை மொலகொட B/21 இல் வசித்த நிஷான் பமுதித டிஷால் விஜேசிங்க என்ற ஆறு வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 20 ஆம் திகதி கேகாலையில் இருந்து அனுராதபுர விகாரை ஒன்றுக்கு சென்ற பின்னர் சிறுவன் தாய் மற்றும் தந்தை, மூன்று உறவினர்கள் அனுராதபுரத்தில் உள்ள ஏரியில் குளித்துக் கொண்டிருந்த போது இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor