கல்வி அமைச்சிற்கு முன்பு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள தீர்மானம்!

எதிர்வரும் 24ஆம் திகதி கல்வி அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு ஆசிரிய – அதிபர் தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த சபை தீர்மானித்துள்ளது.

இந்த தகவலை அதன் பிரதி இணைப்பாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்த ஆர்ப்பாட்டம் பாடசாலை செயற்பாடுகளுக்கு போதுமான நிதியை வழங்குதல் உள்ளிட்ட சில காரணங்களை முன்னிறுத்தி முன்னெடுக்கப்படவுள்ளது.

மேலும் குறித்த ஆர்ப்பாட்டத்தை 30 தொழிற்சங்கங்களை ஒன்றிணைத்து முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆசிரிய – அதிபர் தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த சபையின் பிரதி இணைப்பாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor