கிளிநொச்சி தனியார் காணி ஒன்றில் புதையல் அகழ்வுப் பணி

கிளிநொச்சி – திருநகர் பகுதியில் தனியார் காணி ஒன்றில் புதையல் இருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய அகழ்வுபணிகள் முன்னெடுக்கப்பட்டன.

கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றின் அனுமதியுடன் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் நேற்று (20.10.2023) அகழ்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இரு கனரக இயந்திரங்கள் மூலம் 17 அடி வரை அகழ்வு நடைபெற்ற போதிலும், பொருட்கள் எவையும் கிடைக்காத நிலையில் பணி இடைநிறுத்தப்பட்டது.

சம்பவ இடத்தில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், கிராம சேவையாளர், பொலிஸார், சிறப்பு அதிரடிப்படையினர் ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர்.

இதேவேளை குறித்த அகழ்வு பணி எதிர்வரும் (22.10.2023) அன்று மீண்டும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor