யாழிற்கு முதன் முறையாக வரும் ஆதிவாசிகள்

யாழ்ப்பாணத்திற்கு முதல் தடவையாக மஹியங்கனையில் வசித்துவரும் ஆதிவாசிகள் பயணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மஹியங்கனை ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னில அத்தோவின் தலைமையிலான 60 ஆதிவாசிகள் குழுவினரே யாழ்ப்பாணத்திற்கு நாளை (21-10-2023) மற்றும் நாளை மறுநாள் (22-10-2023) என இரு நாட்கள் சுற்றுப்பயணம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

யாழிற்கு தாம் செல்லும் முதல் பயணமாக இது அமைவதாகவும், இரு நாட்களும் யாழில் உள்ள பிரசித்தி பெற்ற இடங்களை சுற்றி பார்வையிட்டு மீண்டும் தமது இருப்பிடமான மஹியங்கனைக்கு செல்லவுள்ளதாகவும் ஆதிவாசிகளின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor