தங்கநகை விற்பனை நிலையத்தில் திருடிய பணியாளர் கைது!

தங்கநகை விற்பனை நிலையத்தில் தங்க நகைகளைத் திருடிய குறித்த நிலையத்தின் பணியாளர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் நேற்று வியாழக்கிழமை (19) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நுகேகொடை பகுதியில் இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கடந்த ஆகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி முதல் சுமார் 80 இலட்சம் ரூபா மதிப்புள்ள 14 தங்க மாலைகள், 6 கையணிகள், 2 வளையல்கள் மற்றும் மோதிரம் ஆகியவை திருடப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து சந்தேக நபர் நேற்று மாத்தறை பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கொஹூவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: webeditor