மது போதையில் பேருந்தை ஓட்டிய சாரதி

இ.போ.சபைக்கு சொந்தமான பேருந்தை மது போதையில் ஓட்டி சென்ற சாரதியை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மன்னார் பேருந்து நிலையத்திலிருந்து கடந்த 18.10.2023 திகதி மாலை தலைமன்னார் நோக்கி பயணிகளுடன் சென்ற பேருந்தின் சாரதி மதுபோதையில் வாகனத்தை செலுத்திய நிலையில் மன்னார் போக்குவரத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாரின் விசாரணையில் குறித்த சாரதி மதுபோதையில் வாகனத்தை செலுத்தியமை உறுதி செய்யப்பட்ட நிலையில் சாரதியை நேற்றைய தினம் (19.10.2023) மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து குறித்த சாரதியை எதிர்வரும் 23ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: webeditor