லெபனானில் இலங்கை பெண்ணுக்கு நிகழ்ந்த சோகம்

லெபனானில் இடிந்து வீழ்ந்த கட்டட தொகுதி ஒன்றின் இடிபாடுகளுக்குள் இலங்கையர் ஒருவர் உட்பட ஐந்து பேர் சிக்கியிருக்கலாம் என சந்தேகப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லெபனானில் தெற்கு பகுதியில் 7 மாடி கட்டடத் தொகுதி ஒன்றே இவ்வாறு இடிந்து வீழ்ந்துள்ளது.

கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் அங்கிருந்த இலங்கை பெண் ஒருவரும் அதில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தெற்கு லெபனானில் பணியாற்றும் இலங்கையர்கள் 703 86 754 அல்லது 71 960 810 என்ற வாட்ஸ்அப் இலக்கத்தினூடாக தொடர்பை ஏற்படுத்துமாறு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

குறித்த இலக்கத்துக்கு தொடர்பை ஏற்படுத்தி தங்களது விபரங்களை சமர்ப்பிக்க முடியும் என லெபனானுக்கான இலங்கை தூதுவர் காமினி ஜயவீர தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor