பொலிஸாரின் மோசமான தாக்குதலால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தலைவி வைத்தியசாலையில்

இலங்கை பொலிஸாரால் நேற்று முன் தினம் மிக கடுமையாக தாக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி உடல்நிலை சரியில்லாமல் நேற்றைய தினம் காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேற்றைய முன்தினம் இலங்கை ஜனாதிபதியின் மட்டக்களப்பு வருகையின் போது போராட்டங்களை முன்னெடுத்த அவர் மீது இலங்கை பொலிஸார் கடுமையான தாக்குதல்களை நடத்தியருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Recommended For You

About the Author: webeditor