தமிழ் எம். பிமார் சபையின் உள்ளும் புறமும் தொடர்ந்து போராட வேண்டும்! சபா குகதாஸ்

தமிழ் எம். பிமார் சபையின் உள்ளும் புறமும் தொடர்ந்து போராட வேண்டும் என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

 

தமிழ்த் தேசிய கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் வெற்றுக் கதிரைகளைப் பார்த்து பேசுவதை எதிர்வரும் நாட்களில் குறைத்து ஒற்றுமையாக சபையின் உள்ளும் புறமும் தொடர்ந்து போராட தயாராக வேண்டும் 75 ஆண்டுகளாக பேசுகிறோம் மாற்றத்திற்குப் பதிலாக மக்களுக்கு கிடைத்தது அநீதிதான்.

 

பாராளுமன்றத்திலும் ஒற்றுமை இன்மையை காட்டிக் கொடுக்காமல் சுயலாப நோக்கில் செயற்படாமல் ஒற்றுமையே பலம் என்ற நோக்கில் களத்தில் இறங்குங்கள்ைசெயலில் காட்டுங்கள்.

 

பாதிப்பின் உச்சத்தில் விரக்தி நிலையில் வாழும் வடக்கு கிழக்கு மாகாண பெரும்பாண்மைத் தமிழ் மக்களின் மனநிலையை விளங்கிக் கொண்டு தொடர்ந்து போராட்டங்களை அறிவித்து பலவீன நிலையை வெளிப்படுத்தாது மக்கள் போராட்டங்களை அறிவித்து அரசியல் இருப்புக்கான குளிர்காய்தலை தவிர்த்து ஆக்க பூர்வமாக சர்வதேச நாடுகளின் அதன் ஊடகங்களின் கவனத்தை திசை திருப்ப போராட்டக் களமாக பாராளுமன்றத்தின் சபையின் மையப் பகுதியையும் பாராளுமன்ற முகப்பு வாயிலையும் ஐ நா வதிவிடப் பிரதிநிதியின் வாசஸ்தலத்தின் வாசலையும் முதன்மையான நாடுகளின் தூதரக வாசலையும் மாற்ற வேண்டும்.

 

உள்ளக நீதிப் பொறிமுறையில் நாட்டு மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர் என எதிர்க் கட்சித் தலைவர் சஐித் பிறேமதாஸ கூறிய விடையம் மிக முக்கியமானது தமிழர் தரப்பு அதனை வலுப்படுத்தி சர்வதேச நீதிப் பொறிமுறைக்கான கதவினைத் திறக்க தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து போராடுவதன் மூலமே மாற்றத்தை கொண்டு வரலாம் இத்தகைய போராட்டம் நாட்கள் கழிய பல எதிர்க் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களையும் இணைப்பதற்கான வழியை திறக்கும்.

 

தனித்து ஓடினால் மக்கள் நன்றாக ரசிப்பார்கள் வாக்கு வங்கி அதிகரிக்கும் என நினைக்கும் பிற்போக்கு சிந்தனையைத் தவிர்த்து சகலரையும் ஒன்றினைத்து போராட முன் வாருங்கள் தமிழ்த் தேசியக் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களே. இத்தகைய செயற்பாடே நீதிக்கான வழியைத் திறக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: S.R.KARAN